Wednesday, November 20, 2019

எழுத மறந்த கதை - பாடலும் கூடலும்



அலுவலக வேலைகளை இலகுவாக்கவும் புதிய கற்பனை உற்டெடுக்கவும் (என் எல்லா பயோ கிளைமாட்டிக் ஆர்கிடெக்ச்சர் பிளான்கள் அவர் பாடல்கள் கேட்டு உருவானவையே) அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை, அடிக்கரும்பின் சுவை பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை... 


ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில்  தட்டி நிற்கும்.




ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை 'இன்னொரு வாட்டி போடுஙக' மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு, இளையராஜாவா ? என்றுகேட்டான்  வட இந்திய நண்பன்.நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும்.


"இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது.


நான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல , வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார்.  "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" பாட்டிலே  சலீல்தா சாயல் நிறைய இருக்கு, சலீல்தா பாட்டுக்களை கேட்டவர்களுக்கு தெரியும்.


தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி, களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?


நான் டிரைவரை நீண்ட தூரம் போகும் போது அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருப்பேன் . ஒரு முறை அவர், "இளையராஜா பாடல்கள்  நிறைய வச்சிருக்கீறீங்களே  சார். போயிட்டே இருக்கலாம்" என்றார்.


போயிட்டே இருக்கலாம்...


ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் கவுண்ட்டர்பாயிண்ட்க‌ள்?


என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு கவுண்ட்டர்பாயிண்ட் புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா?


இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் புதையல் போன்றவை. புதையல் இருக்கும் இடமும், அது பாடலுக்குள் புதைந்திருக்கும் நொடிகளையும் நாம் கண்டடைவதற்கு எத்தகைய முயற்சிகளும் தகும்.



Tuesday, September 17, 2019

Asha Bhosle


HAPPY B'' DAY. LONG LIVE ASHAJI

Few songs that prove her versatility

1. Aayiye Meherbaan
Picture this. Yesteryear diva Madhubala’s ethereal beauty and Asha Bhosle’s flirtatious voice! The ‘Meherbaan’ will come for sure.
2. Mera Kuchh Saamaan
It’s sometimes difficult to decide what makes ‘Mera Kuchh Saamaan’ from ‘Ijaazat’ so haunting? The music by RD Burman, the lyrics by Gulzar or Asha Bhosle’s voice, but whatever it is, the song is inarguably one of the best melodies India has seen.
3. Dil Cheez Kya Hai
And there was nobody, mark it, nobody who could have sung this song better. In fact, all the songs that needed to have some ‘ada’ or ‘nazaaqat’ were sung by Asha Bhosle in those days.
4. Abhi Na Jao Chhodkar
Chances are that when you listen to this song and it gets to completion, your heart will say, “Dil abhi bhara nahin…”
5. Hungama Ho Gaya
Long before its remixed version from last year’s ‘Queen’ rocked the chartbuster list, it was the original version by Asha Bhosle that was the favourite among the music lovers.
6. Jaayiye Aap Kahaan Jaayenge
You won’t be able to go anywhere after listening to this.
7. Raat Akeli Hai ‘Jo Bhi Chahiye Kahiye….’
There’s nothing more sensual than this song.
8. Kabhi Toh Nazar Milao
Asha Bhosle COLLABORATED with Adnan Sami for this non film song and it became the most sought-after song of unrequited love in the 90s.
9. Aaja Aaja Main Hoon Pyaar Tera
There are few reasons as to why Asha Bhosle is called the ‘Queen Of Groove’ and this is one of them.
10. Piya Tu Abb Toh Aaja
And this is another. Even Monika would agree.
11. Jaayiye Aap Kahaan Jaayenge
Nowhere.
12. Do Lafzon Ki Hai Dil Ki Kahaani
And it’s all about Asha Bhosle’s music.
13. Jhumka Gira Re
Asha Bhosle’s variety in songs can’t be proved any better than this song.
14. Pardey Mein Rehne Do
A single line that can describe this song perfectly is that Asha Bhosle has lived this song. And this song, as a whole, serves a tutorial for budding singer.
15. Chura Liya Hai Tumne Jo Dil Ko
Asha Bhosle literally stole hearts with this song.
16. Dum Maaro Dum
A cult song, and the first of its kind.
17. Mujhe Rang De
This song from ‘Takshak’ has everybody grooving to its tunes, even though the movie or stars couldn’t.
18. Tumse Milke Aisa Lagaa
One of the best romantic songs of the modern times, Asha Bhosle’s voice only added to the beauty.
19. Hoja Rangeela Re
The ‘Queen of Groove’ as we mentioned.
20. Radha Kaise Na Jale
Great music, great lyrics and Asha Bhosle and Udit Narayan made this song a dream.

Friday, July 26, 2019

கேட்ட பாடல் 1





அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் தூர்தர்சன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது.  அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.


இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு அல்லது மூன்று  ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.


https://www.youtube.com/watch?v=gthNl5fhbzU